என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

குழந்தை பிறப்பை தள்ளிப் போடுறீங்களா..?


இப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் இளம் ஜோடிகள், குழந்தை பெற்றுக்கொள்வதை சிறிது காலத்திற்கு தள்ளிப்போட்டுவிடுகிறார்கள். ஒன்றிரண்டு வருடத்திற்கு வாழ்க்கையை அனுபவித்துவிட்டும், எதிர்காலத்திற்கு
தேவையானதை சேர்த்துவிட்டும் குழந்தை பற்றி பார்த்துக்கொள்ளலாம் என்பது அவர்களது கணிப்பாக இருக்கிறது. இப்படி தள்ளிப்போடுவதில் தவறில்லை.


குறிப்பிட்ட வயதையும் மீறித் தள்ளிப்போடுவது குழந்தையின்மைக்கு காரணமாகிவிடலாம் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். குழந்தையை தள்ளிப்போடுவது பற்றி யோசிப்பவர்களுக்கு டாக்டர்கள் கூறும் அறிவுரை: முக்கியமான காரணம் என்றால் அதிகப்பட்சம் ஒரு வருடத்திற்கு மட்டும் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுங்கள்.

அதுவும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் செய்ய வேண்டும். குழந்தையை தள்ளிப்போடுவதற்காக மருந்துகளையும், ஊசியினையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி கர்ப்பம் தரித்துவிட்டால் கருக்கலைப்பு செய்ய வேண்டாம். அதிகப்பட்சம் 30-35 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது.

இந்த வயதில்தான் பெண்களின் உடல் நிலை சீராக இருக்கும். கருமுட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும், இடுப்பு எலும்புகள் எல்லாம் நன்றாக வளைந்து கொடுத்து சுகப்பிரசவம் ஆகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். காலம் தாழ்த்தி குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, அந்த குழந்தை வளர்ந்து ஆளாகும்போது, அதன் பெற்றோர் தாத்தா, பாட்டிபோல் ஆகிவிடுவார்கள்.

அந்த குழந்தைக்கு திருமணம் செய்து பேரன், பேத்தியை பார்ப்பது என்பது சாத்தியமற்று போகலாம். 35 அல்லது அந்த வயதுக்கு மேல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது, அந்த தாய்க்கும், குழந்தைக்கும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சிலருக்கு குழந்தை பிறப்பதிலேயே பிரச்சினைகள் வரலாம். குழந்தை பாக்கியம் என்பது மிகப்பெரிய `கிப்ட்'. எல்லாவித வசதி வாய்ப்புகள் இருந்தும் அந்த `கிப்ட்' கிடைக்காமல் ஏங்கும் தம்பதியர் பலரை பார்க்கலாம். அதனால், குறிப்பிட்ட வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்வதுதான் ஆனந்தமான வாழ்க்கைக்கு வழிக்காட்டும்.

கருத்துகள் இல்லை: