என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

உங்கள் முகம் வயதான தோற்றமாக தெரிகிறதா !

உங்கள் முகம் வயதான தோற்றமாக தெரிகிறதா 


முகத்தில் வயசான தோற்றம் தெரிய கூடாது என்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக கவனமாக இருப்பார்கள்.

இளமையாகவே இருந்துவிட்டால் நன்றாக தான் இருக்கும் என்றாலும் வயதான பிறகு சருமத்தில் உண்டாகும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. வயதான தோற்றம் தெரியாமல் இருக்க பலவிதமான அழகு க்ரீம்களை வாங்கி பயன்படுத்தும் பெண்கள் வீட்டிலேயே இருக்கும் இயற்கை பொருள்களை பயனப்டுத்துவதன் மூலம் பாதிப்பில்லாத சருமத்தை பெறலாம். இரசாயனங்கள் கலந்த க்ரீம் வகையறாக்கள் சருமத்துக்கு பக்கவிளைவை உண்டாக்க கூடும்.


சருமத்தை பாதிப்பில்லாமல் பாதுகாக்க உதவும் குறிப்புகள் இங்கு பார்க்கலாம். இது நீண்ட காலம் உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க செய்யும். அப்படியான எளிமையான குறிப்புகளை பார்க்கலாம். இந்த குறிப்புகளை நீங்கள் விடாமல் பின்பற்றினால் மட்டுமே பலனை எதிர்பார்க்கலாம்.


பால் பவுடர்

பால் பவுடர் பால் போன்ற முகத்தை தருவதில் முதன்மையானது. இது சாப்பிட சுவையாக இருப்பது போன்று சருமத்துக்கும் ஆரோக்கியமானது. பால் பவுடரை 1 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் எலுமிச்சை சாறு 2 துளி கலக்கவும். இதை மென்மையான பேஸ்ட் பதத்துக்கு ஆக்கி முகத்தில் தடவி எடுக்கவும்.


இதுசருமத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கி சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க செய்கிறது. இதை தினமும் இரவு நேரங்களில் செய்து வருவதன் மூலம் சருமம் ஓய்வெடுக்கும் நேரத்தில் கூடுதல் நன்மைகளை அளிக்கிறது.


தயிர் 


தயிர் புரோபயாட்டிக் நிறைந்த இது சருமத்தை இயற்கையாக சுத்தப்படுத்துகிறது. தயிர் முகத்துக்கு எவ்வித தீங்கும் செய்யாது. சருமத்தை இளமையாக வைத்திருக்க விரும்பினால் தயிரை பயன்படுத்தலாம்.



தயிருடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக ப்ளெண்டரில் கலந்து எடுக்கவும். இதை முகத்திலும் கழுத்திலும் தடவி மென்மையாக மசாஜ் செய்து விடவும். பிறகு முகத்தில் 20 நிமிடங்கள் வைத்து முகத்தை நன்றாக கழுவி எடுக்கவும். வாரம் இரண்டு முறை இதை தவறாமல் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

​வெள்ளரிக்காய்

முகத்துக்கு நன்மை தரும் பொருள்கள் எவ்வளவு இருந்தாலும் சுருக்கங்கள் நீக்கும் பொருள்களை அதிகமாக பயன்படுத்துங்கள். வெள்ளரிக்காய் முகச்சுருக்கங்களை நீக்கி சருமத்தை இளமையாக காட்டும் தன்மை கொண்டது. முதலில் உங்கள் கண்களை இளமையாக காட்டுங்கள். இதுவே உங்கள் வயதை குறைத்து காட்டும்.


வெள்ளரிக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ போன்றவை நிறைந்துள்ளன. வெள்ளரிக்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி வட்டவடிவில் நறுக்கி கொள்ளவும். ஓய்வாக இருக்கும் நேரத்தில் இதை கண்களில் வைத்து 15 நிமிடங்கள் விட்டு எடுக்கவும். இது கண்களில் சுருக்கம் வராமல் தடுக்கும். அதே போன்று வெள்ளரிக்காயை தேனுடன் கலந்து மசித்து முகத்துக்கு தடவினால் முகத்தில் நல்ல ஃபேஸ் பேக் போன்று செயல்படும்.


விளக்கெண்ணெய்


விளக்கெண்ணெய் சருமத்துக்கு நன்மை பயக்க செய்யும். அடர்த்தியாக பிசுபிசுப்பாக இருந்தாலும் இதை சரியான முறையில் பயன்படுத்தினால் சருமம் வயதான தோற்றம் பெறுவதை தடுக்கலாம்.

இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தை சுத்தம் செய்து 2 அல்லது 3 துளி விளக்கெண்ணெய் எடுத்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்துவிடவும். இரவு முழுவதும் எண்ணெய் சருமத்துளைகளுக்குள் ஊடுருவும். இது சருமத்தை ஒளிர செய்யும். சரும சுருக்கங்களை குறைக்கவும் உதவும். இதை தினமும் செய்ய வேண்டியதில்லை. வாரம் ஒருமுறை செய்தால் கூட போதுமானது.







கருத்துகள் இல்லை: