கண் மை - அதாவது இந்த காலத்தில் காஜல் என்று அழைக்கப்படும் அழகுப்பொருள், கண்ணிற்கு அழகு சேர்க்க பெரும்பாலான பெண்களால் பயன்படுத்தப்படுகிறது. உலகத்தில் முதன் முதலாக பெண்களால் பயன்படுத்தப்பட்ட, முதல் அழகுப்பொருள் கண் மை தான்.
தங்கள் அழகிய கண்களை மேலும் அழகாக்க பெண்கள் ஆதி காலத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தி வரும் முக்கிய அழகு சாதனம் காஜல். இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், 5000 ஆண்டுகள் முன்னர் தோன்றிய கண்மை, இன்று வரை அதே முக்கியத்துவத்துடன் இருந்து வருகிறது.