என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
பெண்களுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்களுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா?

ருத்தரிக்கும் பெண்ணின் உடல் நிலை சாதாரணமாக இருக்கும்பட்சத்தில், கருவுறுதலுக்கு முன்பு, பிரத்யேகப் பராமரிப்பு எதுவும் தேவையில்லை. ஆனால், சர்க்கரை நோய், வலிப்பு, இதயநோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் முன்பே, முழு உடல் பரிசோதனை செய்து, மருந்துகள் எடுத்துகொண்டு, உடலை கருத்தரிக்க ஏற்றநிலையில் வைத்துக் கொண்ட பிறகு, கருவுறுதல் நல்லது.

இதனால் கர்ப்பகாலம்-பேறுகாலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகளை மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி சர்க்கரை நோய் நிபுணரும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். சிறுவயது முதல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பகாலத்திலும் இன்சுலின் கண்டிப்பாக அவசியம்.
மாத்திரை பயன்படுத்துவோர் கூட, இன்சுலின் ஊசிக்கு மாறுவது நல்லது. நீரிழிவு மாத்திரைகளால் குழந்தைக்கு ஏதேனும் உடல் நலக்குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பருவ வயதில் சர்க்கரைநோய்க்கு ஆளானவர்களாக இருந்தால் ஊசி, மாத்திரை இரண்டையும் தவிர்த்துவிட்டு உணவு-உடற்பயிற்சி வாயிலாக, நீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால், ஐந்தாம் மாதத்தில் குளுகோஸ் டாலரன்ஸ் பரிசோதனை செய்து சர்க்கரையின் அளவுதெரிந்து, இதற்கேற்ப கர்ப்பிணிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

வெள்ளைப்படுதல் நோய்.! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம்.
அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.
பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
கைப்பிடி அளவு வெள்ளருகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.
இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.
ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.
பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.
இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடித்துப் பருகி வரலாம். .
திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.
ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.
பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.
சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
ஒரு கைப்பிடி துத்தியிலையை இடித்து 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து அதில் பால், சர்க்கரை கலந்து பருகலாம்.
சிறு துண்டு கற்றாழையைத் தோல் சீவி, கசப்பு நீங்கப் பத்து முறை நன்கு கழுவி சர்க்கரை சேர்த்து, தினமும் காலையில் சாப்பிட்டுவர வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.
விஷ்ணு கிரந்திவேர், ஆவாரை வேர்ப்பட்டை சம அளவு எடுத்து அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்துப் பாலில் உண்ணலாம்.
தண்ணீர்விட்டான் இலையை அரைத்து 30 மி.லி. சாறு எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
தென்னம்பூவை இடித்து, 30 மிலி சாறு எடுத்து, மோர் சேர்த்துப் பருகலாம்.
உணவுகள்
சேர்க்க வேண்டியவை:
தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரி, வெந்தயம், பசலைக்கீரை, தண்டுக்கீரை, பருப்புக்கீரை, இளநுங்கு, நாட்டு வாழைப்பழம், நல்லெண்ணய், பனங்கிழங்கு.
தவிர்க்க வேண்டியவை:
மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கோழி இறைச்சி.

பீர் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு ஸ்டிராங் ஆகும்

*வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதாம் பீர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

*எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால், எலும்புக்கு ஆரோக்கியமளிப்பதும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:
மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.

*இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில் உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர்ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக, வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கிறதாம். பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலிகான் பெரும்பாலான தாவர பயிர்களிலும் காணப்படுவதாகும்.

*குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலும்புகள் ஆரோக்கியமாக வளரவும் உதவும். பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும்.

*அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். கவனிக்காமல் விடும் பட்சத்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய சமயங்களில் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

*உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகான் அளவைவிட பன்மடங்கு அதிகமாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசியமாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

*அவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



ரோஸ் லிப்ஸ் வேணுமா? - அழகு குறிப்புகள்


தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கிறது. மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல உதடுகளும் உண்டு. கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், “வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.
வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் கூட வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, “சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவி வரலாம்.
உதடுகளில் வெடிப்பு
அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும். பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
உதடுகள் மென்மையாக
வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உதடுகளில் ஒத்தடம் தரவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் ஒத்தடம் தரலாம். வாரம் மூன்றுநாட்களுக்கு இவ்வாறு செய்து வர உதடுகள் ரோஜா பூ நிறத்திற்கு மாறுவதோடு மென்மையாகும்.
வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில் உதடுகள் ரோஜா நிறமாவதுடன்,மென்மையாகவும் ஆகும்.
தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாகும்.
மென்மையான உதடுகள்
வீட்டில் உள்ள பொருட்களே உதடுகளை அழகாக்க பயன்படுகின்றன. வெண்ணெய் அல்லது நெய்யை தினசரி உதடுகளில் தடவி வர உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.
முட்டையின் வெள்ளைக்கருவோடு சிறிதளவு பாதம் பவுடர், சிறிதளவு பாலடை கலந்து உதடுகளில் தடவி வர உதடுகள் வறட்சி நீங்கி மென்மையாகும்.
பாதம் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உதடுகளில் ஐந்து நிமிடம் தேய்க்கவும். தினசரி இதனை தேய்க்க உதடுகள் மென்மையாகும்.



`டயட்'டில் முன்னழகு பாதிக்கிறதா?


 
சில பெண்கள் சராசரி உடல் எடையைவிட அதிக எடையில் இருப்பார்கள். திடீரென்று யாரோ சொன்ன ஆலோசனையின்பேரில் `டயட்'டில் இருந்து உடம்பை குறைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது, அவர்கள் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவு அல்லது மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காரணமாக அவர்களது உடல் மீண்டும் ஏறிவிடும்.
இப்படி உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்து விடும் என்கிறார்கள் அவர்கள்.

இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

* மார்பக அழகுக்கு முக்கிய தேவை புரோட்டீன். இந்த புரோட்டீனில்தான் மார்பகம் சரியான `ஷேப்'பிலும், எடுப்பான தோற்றத்திலும் காட்சியளிக்கத் தேவையான கொலாஜன் இருக்கிறது. அதனால், புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.

* உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் மார்பகங்களை ஐஸ் வாட்டர் கொண்டு ஒற்றியெடுக்கலாம்.
* முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை பெண்கள் தவிர்த்துவிட வேண்டும். தொடர்ந்து வெந்நீரில் குளித்து வந்தால் மார்பகத் தசைகள் தொய்வடைந்து விடும். இதை ஆய்வு செய்தும் நிரூபித்து இருக்கிறார்கள். அதேநேரம், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வெந்நீரில் குளிக்கும்போது மார்பகத்தில் வெந்நீர் படாமல் குளிக்கலாம். 

முன்னழகு ரகசியம்


 

சில பெண்களுக்கு வயதுக்கு ஏற்ப்ப மார்பக வளர்ச்சி காணப்படாது. அதை நினைத்து கவலை வேண்டாம். உங்களுக்காக சில டிப்ஸ்....

இன்று சில பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தன் மார் அழகு கெட்டுவிடும் என்று பால் கொடுப்பதை தவிர்த்துவிடுறாங்க. இதுதவறான கருத்து. சரியான முறையில் உள்ளாடை அணிந்தும், உடற்பயிற்சிகள் செய்தால் சரி செய்துவிடலாம்.

வயதுக்கு ஏற்ற மார்பக வளர்ச்சிக்கு:
* சில பெண்களுக்கு மார்புகள் சிறியதாக இருக்கும் அவங்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய சின்ன சின்ன உடல்பயிற்சிகள் செய்து சரிசெய்யலாம்.
* நின்றுக்கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குதால்.
கீழே உட்காந்து முதுகை நேராக நிமிர்ந்தி வைத்து மூச்சினை உள்ளே இழுத்து மெல்ல மூச்சினை விடவும். இதனை போல் தொடர்ந்து செய்யவும்.
* நன்றாக ஸ்கிப்பிங் செய்யவும்.
* மார்ப்புகளுக்கு என்று மருத்துவரின் ஆலோசனையின் படி breast developing cream வாங்கி மார்பில் தடவி மசாஜ் செய்யவும். அல்லது வீட்டிலே பாலாடையும் தேய்து மசாஜ் செய்யவும். விளம்பரங்களில் மயங்கி கண்ட க்ரீமை பயன்படுத்த வேண்டாம்.

* மசாஜ் செய்யும் பொழுது அழுத்தி தேய்க்க கூடாது.. வட்டமான முறையில் மசாஜ் செய்யவும்.
* உணவில் அதிகம் காய்கறிகள், கீரிம் உணவுகள், பால், முட்டை, சீஸ் போன்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளவும்.

அளவுக்கு மீறிய வளர்ச்சி:* இந்த மாதிரி இருக்கும் பெண்கள் கட்டாயம் மசாஜ் செய்யக்கூடாது.
* இவற்கள் நடைபயிற்சி, வீட்டை துடைப்பது, துணியினை கையால் துவைப்பது போன்ற வேலைகளை செய்யவும்.
* அதிகமாக குறையும் என்று சொல்லமுடியாது. இது ஹார்மோன் பிரச்சனையால் தான் இந்த வளர்ச்சியிருக்கும் ஆகையால் மருத்துவரின் ஆலோசனை படி நீராவி சிகிச்சை அல்லது ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் சரியாக்கலாம்.
* அதிக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்த்து விடவும்.

சரிந்த மார்புக்கு:* குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து மார்புகள் சரிந்து அழகில்லாமல் இருக்கும் அவங்க கட்டாய்ம் எப்பொழுதும் உள்ளாடையினை சரியான அளவில் தேர்வு செய்து போடனும்.
* அதிக இருக்கமில்லாத உள்ளாடையினை போடவும்.
* நின்றுக்கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குதால்.
* கீழே உட்காந்து முதுகை நேராக நிமிர்ந்தி வைத்து மூச்சினை உள்ளே இழுத்து மெல்ல மூச்சினை விடவும். இதனை போல் தொடர்ந்து செய்யவும்.
* நன்றாக ஸ்கிப்பிங் செய்யவும்.தொடர்ந்து இவ்வாரு செய்தால் சில நாட்களின் உங்களின் பிரச்சனைகள் சரியாகிவிடும்.

தாய்ப்பால் கொடுத்தால் ரத்த அழுத்தம் வராது

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு
குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை
தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
என்பது டாக்டர்கள் கூறும் அறிவுரை.
ஆனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு 
இளம் தாய்மார்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், 
தாய்ப்பால் கொடுத்தால்
உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படாது 
என்பது
தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, 50 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பெண்களிடம்
அமெரிக்காவில் ஆய்வு நடந்தது. அப்போது, 
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்த
பெண்களை விட 
கொடுக்காத பெண்களுக்கு பின்னாளில்
உயர் ரத்த அழுத்த நோய் 
அபாயம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
தாய்ப்பால் கொடுப்பதால்
வேறு சில நன்மைகளும்
தாய் மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்க.

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற தொல்லைகள் மற்றும் சீரான மாதவிலக்கு இல்லாமல் அவஸ்தைப்படும் பெண்களுக்கு எளிய முறையில் ஒரு வைத்தியம் உள்ளது.

7 ,8 மிளகை எடுத்து பொடித்து அதே அளவு வெள்ளை கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணிரில் போட்டு கலக்கி கொள்ளுங்கள்.இதே அடுப்பில் வைத்து அரை டம்ளர் அளவு ஆகும்வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்.

அதன் பிறகு இறக்கி,வடிகட்டி,ஆறவைத்து குறிப்பிட்ட அந்த மூன்று நாட்களுக்கு அதிக்காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் அளவு அந்த கசாயத்தை குடிக்க வேண்டும்.இதனால் மாதவிலக்கு சம்பத்தபட்ட சகல கோளாறுகளும் நிங்கும்.

நீங்களும் அழகி தான்!


நான் உங்களுக்கு அதிக செலவுயில்லாமல் உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க மாற எளிமையான அட்வைஸ் தருகின்றேன் பாருங்கள்.

ஒரு தக்காளி பழத்தை எடுத்து ரொம்ப சின்னதாக வெட்டி அதை முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.

* பின் சிறிது நேரம் கழித்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடம் அப்படியே காயவிடுங்கள் அதன் பிறகு நல்ல குளிர்ந்த தண்ணிரில் முகத்தை கழுவுங்கள். இப்போது பாருங்கள் உங்கள் முகத்தை நீங்களே வியந்து விடுவீர்கள்.

* முகத்தை முதலில் பால் வைத்து நன்கு துடைக்கவேண்டும். பிறகு கட்டி தயிரில் உப்பு கலந்து முகத்தில் அழுத்தி தேய்க்க வேண்டும். இப்படி தேய்த்தால் முகத்திலும் மூக்குக்கு மேல் இருக்கும் பொடிப்புகள் போகும் இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வர பலன் கிடைப்பது உறுதி.

சாம்பார் வைப்பது எப்படி?



முதலில் தமிழர்களின் தேசிய குழம்பான சாம்பார் வைப்பது எப்படின்னு பார்க்கலாம்.

முதலிலேயே சொல்லிடறேன் இது பேச்சிலர் சமையல் தளம். அது இது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். சமாளிச்சிக்கோங்க. :)

தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - 200 கிராம் (4பேருக்கு)
தக்காளி - 3
வெங்காயம் - 2 பெரியது அல்லது 8 சிறியது
புளி - எலுமிச்சம்பழம் அளவு
சக்தி மசாலா சாம்பார் பொடி - 4 ஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை :
1. முதலில் பருப்பைக் கழுவி குக்கர் அல்லது பாத்திரத்தில் நன்கு வேகவைக்கவும். குக்கர் என்றால் இரு மடங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் அடிக்கும் வரை அடுப்பில் வேகவைக்கவும். பாத்திரம் என்றால் கையில் எடுத்துப் பார்த்து பருப்பு வெந்துவிட்டதா எனப் பார்த்துக் கொள்ளவும். கை சுட்டுக்கும் எனவே சுட்ட கையை நல்ல குளிர்ந்த நீரில் கழுவவும்.

2. பருப்பு வேகும் நேரத்தில் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

3. பின்னர் வாணலியை(வானொலி அல்ல) அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு மீண்டும் வதக்கவும்.

4. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சக்தி சாம்பார் பொடியைப் போட்டு மறுபடியும் வதக்கவும். தேவையெனில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

5. இப்போது அடுப்பில் தீயைக் குறைத்து வைத்துவிட்டு வேகவைத்த பருப்பையும், புளிக்கரைசலையும் வாணலியில் ஊற்றவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

6. பின்னர் தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

அவ்வளவுதான் கும்முன்னு சாம்பார் தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் எதற்கு வேண்டுமானாலும் ஊற்றிச் சாப்பிடுங்க.

குறிப்பு : சாம்பாரில் மேலும் முருங்கைக்காய், காரட் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் துண்டுகளாக நறுக்கி பருப்புடன் சேர்த்து அவித்துக் கொள்ளவும். கத்தரிக்காய் சேர்க்க விரும்பினால் துண்டுகளாக நறுக்கி தக்காளியுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

உப்புமா கிண்டுவது எப்படி?



நான் பதிவுல உப்புமா கிண்டுறது எப்படின்னு சொல்லலை. அதுக்க்கெல்லாம் கில்லாடிகள் நிறைய பேர் இருக்காங்க. இது வேற. சாப்பிட உப்புமா கிண்டுறது எப்படின்னு தான் சொல்லப் போறேன்

தேவையானவை :
ரவை - 1 சிறிய டம்ளர் (1 ஆளுக்கு)
பெரிய வெங்காயம் - 1ல் பாதி
மிளகாய் - 2
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - கொஞ்சம்

செய்முறை :
1. ரவையை வாணலியில் போட்டு கொஞ்சம் பொன்னிறமாக வரும்படி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

2. வெங்காயம், மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

4. வதக்கிய வெங்காயத்துடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். அப்படியே உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

5. பின் வறுத்த ரவையை அதில் சேர்த்து விடாமல் கிண்டவும்.

5 நிமிடம் கழித்துப் பார்த்தால் சுவையான உப்புமா தயார்.

குறிப்பு : ரவையை தண்ணீருடன் சேர்க்கும் போது காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி தண்ணியைக் குடிக்கும். பயந்துறாதீங்க. ஒன்னும் ஆகாது. தீயைக் குறைத்து வைத்துவிட்டுக் கிண்டுங்கள். அய்யோ பாவம்னு கூடக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் அப்புறம்  கெட்டி
ஆகிரும். அனுபவம் உள்ளவன் சொல்றேன். கேட்டுக்கங்க.

வண்ண வண்ணக் கோலங்கள்

வண்ணக் கோலங்கள்



17ல் இருந்து 9 வரை ஊடுபுள்ளி




17ல் இருந்து 1 வரை நேர்புள்ளி


Loading the 
image...........



Star Kolam

13ல் இருந்து 7 வரை ஊடுபுள்ளி


14 புள்ளி 2 வரிசை
7 வரை ஊடுபுள்ளி



flower-kolam

13ல் இருந்து 7 வரை ஊடுபுள்ளி

vegetable-kolam 

15 புள்ளி 8 வரிசை 8 வரை நேர்புள்ளி




15 புள்ளி 3 வரிசை 3 வரை நேர்புள்ளி

 

15ல் இருந்து 8 வரை ஊடுபுள்ளி


 

13ல் இருந்து 7 வரை ஊடுபுள்ளி




17ல் இருந்து 9 வரை ஊடுபுள்ளி

பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும்,
சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு
நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்...
பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,
கரும்புள்ளி ஆகியவை மறையும்.
தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு
ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன்,
ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து
முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம்
பளப்பளப்பாக இருக்கும்.
தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து
முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை
நீங்கி பளிச்சிடும்.
ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம்
பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்
எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி
முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,
கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி,
மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.சிறிதளவு பால்,
ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச்
சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக
வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள்
மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.
வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு
நன்றாக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம்
எண்ணை வழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள்
கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.
முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து
ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை
முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில்
முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில்
மறுபடியும் தடவவும்.நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக
மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி
மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு
வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில்
இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.
கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில்
தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு
காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.
ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை
கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம்
அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா
உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை
நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி
செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.
சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல
திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள்
இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.
பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது
தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல்
கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால்
ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.
ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன்
கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்
கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.
புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில்
கழுவ முகம்பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு
செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால்,
தேங்காய்எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர
மிருதுவாக மாறும்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின்
மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக்
பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.
தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம்
கழித்து கழுவவேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில்
ஏற்படும் சுருக்கம் மறையும்.
முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன்
மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு
தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம்
மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.
சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள்
முகப்பருமறைந்து விடும்.
வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன்
தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான
சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர,
வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.
உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும்
எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ
இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும்
ரோஸ் வாட்டர் கலந்துமுகம் மற்றும் கழுத்தில் தடவி வர
சருமம் பளபளக்கும்.
கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ
வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு
தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன்,
எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து
தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால்
வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி
கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.
வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும்
சம அளவு கலந்துமுகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால்
முகம் பிரகாசமாக இருக்கும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில்
நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி,
கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர்,
ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து,
எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை
நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு
எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில்,
அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து
வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி
கருமையாகும், பொடுகு நீங்கும்.
நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக்
காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம்.
வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து
கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில்
சாப்பிட வேண்டும்.
புருவங்களை சீர்திருத்தி கொண்டால் முகம் அழகாக இருக்கும்.
மிக மெல்லியபுருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக
அடர்த்தியான புருவம் வைத்துக்கொள்வதும் தற்போது
நாகரிகம் இல்லை.
நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில்
தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள்
இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள்
ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும்.
காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள
ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர
ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில் கலந்து கொள்ளும் போது
டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க் போன்ற
நிறங்களை பயன்படுத்தலாம்.

நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு.
ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது.
பிளவுசும் இறுக்கமாகஇல்லாமல் சிறிது தொள தொளவென அணிய
வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக
உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.
சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று
அழுத்தமான வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின்
வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில்
இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து
வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.
ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண
நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில்,
கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த
வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.
உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக்
காட்ட குறுக்குகோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து
அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று
அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்டசேலைகளை
அணிய வேண்டும்.
மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை தூக்கி சீவ
வேண்டும்.கூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு
அளவுடன் இருப்பதை போல் தோற்றம் கிடைக்கும்.சந்தனம்,
முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம்
பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு
டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான
சுடுநீரில் கழுவ, முகம்மிருதுவாகும்.
ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து
கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை
மறைந்து மிருதுவாக மாறும்.
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக்
கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில்
தடவி,ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு
நிறமுள்ள புள்ளி மறையும்.
தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர
சின்னம்மையால்ஏற்பட்ட வடு மறையும்.
பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி
வைக்க கண்களைச்சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

கருவளையம் மறைய… நீங்களும் அழகு ராணி தான்

ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்…
Godefroy Instant Eyebrow Tint, Light Brown*தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.
*வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
*பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.
*தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.
*வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
*பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.
Sudden Change Eyebrow Shapers 18's* ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்து விடும்.
*போதிய அளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

மாதவிடாய் நாள் தவறுவதேன்?


மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியிலோ, குறைந்தோ அல்லது நாள் தவறியோ ஏற்படலாம். குறைந்தது 21 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படுவது நார்மல்
என்று கருதப்படுகிறது. ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்றும், 6 வாரங்களுக்கு நீடித்தால் மாதவிடாய் தவறியது என்றும் பொருள்.


இதற்கான காரணங்கள்:

கருத்தரிப்பு:

கருத்தரித்திருந்தால் மாதவிடாய்த் தவறும். மருத்துவரை அணுகி கர்ப்பம் தரித்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொண்டு மாதவிடாய் தவறியதற்கான மற்ற காரணங்களை பரிந்துரை செய்யலாம்.

சாதாரண நடைமுறை:

மாதவிடாய் ஏற்படத் துவங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு, உடலின் ஹார்மோன்கள் மாதவிடாய் மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நிலையில் இருக்கும், இதனால் சூலகத்திலிருந்து மாதமொருமுறை கரு முட்டையை வெளியேற்ற தாமதமாகும்.

கவலை:

மனக்கவலையோ, அழுத்தமோ இருந்தால் மாதவிடாய் தாமதமாவதற்கும் தவறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அல்லது கடுமையான காய்ச்சல், பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல், கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல், கடுமையான உடற்பயிற்சி இவைகளாலும், விரதம் போன்றவற்றாலும் கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.

ஹார்மோன் சமச்சீரின்மை:

இது அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். சில சமயங்களில் கருத்தடை மாத்திரைகளை நிறுத்தியிருந்தீர்களானால் தற்காலிகமாக ஹார்மோன்கள் சமன்நிலை குலையும். இதனால் மாதவிடாய் தவறும். தைராய்டு சுரப்பி கபச் சுரப்பு, அட்ரினல் சுரப்பிகள் மற்றும் கருசூலகம் ஆகிய பிரச்சினைகளால் அரிதாக மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம்.

மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?


மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலேக்டின் ஹார்மோன்கள் உருவாகும். சரியான விகிதத்தில் உருவாகி, வயதுக்கு வந்ததும் முழு வளர்ச்சி அடைந்திருந்தால் மார்பகம் பெரிதாகும்.

இதோடு மாதவிலக்கும் ஒழுங்காக வ‌ந்தால், உங்கள் பிரச்சனையை உணவு, உடற்பயிற்சி மூலமாகவே தீர்க்கலாம். புரோட்டீன் அதிகமுள்ள பருப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன் பவுடர், வைட்டமின் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.

மார்பு என்பது கொழுப்புகளால் சூழப்பட்ட பகுதி. எனவே கொழுப்பு அதிகமுள்ள சீஸ், ஐஸ்க்ரீம், சாக்லெட், மட்டன், முட்டை, பால் அடிக்கடி சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகலாம். செயற்கை முறையில் சிலிக்கான் என்ற பொருளைப் பொருத்தி, சர்ஜரி மூலமும் மார்பகத்தை பெரிதாக்கலாம்.

ஆனால் அதற்கு செலவு அதிகமாகும். எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும் எனவும் கூற முடியாது. பக்கவிளைவு ஏற்பட வாய்ப்புண்டு

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்


வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ப்போது‌ம் டெ‌ன்ஷனா? மன அழு‌த்‌த‌‌த்தா‌ல் அ‌வ‌தி‌ப்படு‌கி‌றீ‌ர்களா? ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌கிறதா? கை‌யி‌ல் வெ‌‌ண்ணையை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைவானே‌ன்? ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது.

சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்து நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர். எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், வார‌த்‌தி‌ல் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு மனு அழு‌த்த‌ம் குறை‌ந்‌திரு‌ந்தது.

இது வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு ‌ஆ‌‌ய்வு ம‌ட்டும‌ல்ல. அதாவது அ‌றி‌விய‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் இதனை ஆ‌ய்வு செ‌ய்தவ‌ர்க‌ள் ‌விள‌க்கு‌கிறா‌ர்க‌ள். WD அதாவது, அலுவலக ‌பிர‌ச்‌சினைக‌ள், ‌வீ‌ட்டு ‌பிர‌ச்‌சினைக‌ள் என எதையு‌ம் த‌ங்களது படு‌க்கை அறை‌க்கு‌ள் நுழைய ‌விடாம‌ல், வா‌ழ்‌க்கை‌த் துணையை அ‌‌ன்பாக நட‌த்து‌ம், ஒருவரு‌க்கொருவ‌ர் த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு, மன அழு‌த்த‌த்து‌க்கு காரணமான கா‌ர்டிசா‌ல் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் குறைவான அள‌விலேயே சுர‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் மன அழு‌த்த‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சில த‌ம்ப‌திகளு‌க்கு இடையே, நெரு‌க்க‌த்தை உருவா‌‌க்‌கிய‌ப் ‌பிறகு அவ‌ர்களது மன அழு‌த்த‌ம் பெருமளவு குறை‌ந்ததாகவு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர். வெறு‌ம் மன அழு‌த்த‌த்தை‌க் குறை‌ப்பத‌‌ற்காக ம‌ட்‌டு‌ம் நமது வா‌‌ழ்‌க்கை‌த் துணையை‌க் க‌ட்டி‌பிடி‌ப்பதா‌ல் ‌எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. இருவருமே மன‌ம் ஒரு‌மி‌த்து, த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக நெரு‌க்கமாக இரு‌ப்பதா‌ல்தா‌ன் உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம். இதையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ‌பீ‌ட் டி‌ட்ச‌ன்.

சக்தி மிக்க சீம்பால்

குழந்தை பிறந்ததும் `சீம்பால்' என்று அழைக்கப்படும் முதல் தாய்ப்பாலை அதற்கு தவறாமல் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது ஏன் தெரியுமா? பிறந்த குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். சீம்பாலில் அந்த சக்தி அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அதனால், எளிதில் அந்த குழந்தையை எந்த நோயும். தாக்காது.இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது. ஒரு தாயானவள், தனது குழந்தையை மார்போடு அணைத்து பால் ஊட்டும்போது, அந்த குழந்தைக்கு தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கிறது.

இவை ஒரு குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. இவை கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்களே நிரூபித்து இருக்கிறார்கள். அதனால், எந்த தாயும் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க மறக்க வேண்டாம்.

ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மார்பகம் குறித்து முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்



என்ன அளவு? என்ன நிறம்? என்ன வடிவம்? என ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மார்பகம் குறித்து முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதோடு முன் கூட்டியே கண்டறியும் பரிசோதனைகளையும் மேற்கொண்டால் எந்தவொரு நோயையும் ஆரம்ப கட்டத்திலேயே எளிதில் கண்டுபிடித்து குணப்படுத்திவிட முடியும்.ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்குப் பிறகு உங்கள் மார்பகத்தைக் கண்ணாடி முன் நின்று நீங்களே பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது.சிலருக்கு மாதவிலக்கு நாட்களுக்கு முன்பாக மார்பகம் இறுகிய நிலையை அடையக்கூடும்.இதனால் அவர்கள் ஒருவித அசௌகர்யத்தையும், கனத்தையும் உணரக்கூடும்.இந்த நேரத்தில் சுயபரிசோதனை மேற்கொண்டால் தேவையற்ற பயத்தையும்,பதற்றத்தையும் மட்டுமே அவை உருவாக்கும்.எனவே மாதவிலக்கு முடிந்தபிறகு சோதித்துப் பார்ப்பதே சாலச்சிறந்தது.
கண்ணாடி முன்னால் நின்று கைகளை உயர்த்தி மார்பகம் எப்படி அசைகிறது என்று பாருங்கள். கைகளை பக்கவாட்டில் நகர்த்தி தலையை உயர்த்தி இந்த சோதனையை செய்து பாருங்கள். உங்களுக்கு இயல்பான நிலை எது என்பதைத் தெரிந்து கொள்ள இது மிகவும் அவசியம். அதன் பிறகு இந்த அசைவுகளின் போது ஏதாவது அசௌகரியமாகத் தோன்றினால் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். மார்பகத்தின் வடிவத்தில் என்ன மாற்றம் தென்படுகிறது?எங்காவது வீக்கம் தெரிகிறதா? 
தோலில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?மார்புக்காம்பு உள்நோக்கி இழுத்துக் கொண்டது போலத் தெரிகிறதா என்பனவற்றையும் தெரிந்துகொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
உங்கள் மார்பகத்தை நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்ப்து மிகவும் முக்கியமானதுதான்.சிலருக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் மார்பகங்கள் சற்று வலிப்பது போலத் தோன்றும். அதற்குப் பிறகு வலி குறைந்து பிறகு இல்லாமல் போய் விடும். மாதவிலக்கு சுழற்சியில் அவை எப்படியான மாற்றத்தை அடைகின்றன என்பதையும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் மார்பகத்தை சுயபரிசோதனை செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
1. மார்பகத்தின் வெளிச்சுற்று அல்லது வடிவத்தில் ஏதேனும் புதிதாகத் தென்படுகிறதா? கைகளை அசைக்கும் போது மடிப்புகள் அல்லது குழிவு போல் ஏதேனும் தென்படுகிறதா?
2. இரண்டு மார்பகங்களில் ஏதேனும் ஒன்றில் வலியோ, அசௌகரியமோதென்படுகிறதா? அந்த நிலை சில வாரங்களுக்குத் தொடர்ந்து நீடிக்கிறதா? 
3. ஒரு மார்பகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லாத ஒரு அம்சம் இன்னொரு மார்பில் தென்படுகிறதா?
4. மார்புக் காம்பில் இருந்து ஏதாவது திரவக்கசிவு ஏற்படுகிறதா?
5. மார்புக் காம்பில் இருந்து ரத்தக் கசிவு அல்லது அதைச் சுற்றிய பகுதியில் ஏதேனும் சிவந்து தடித்து காணப்படுகிறதா?
6. மார்பு நுனியின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா? உள்பக்கமாக குழிந்தது போலவோ, வேறு திசையில் இழுத்துக் கொண்டு இருப்பது போலவோ தென்படுகிறதா?
இயல்புக்கு மாறாக புதிதாக எந்தவொரு மாற்றம் தென்பட்டாலும் அதனை உடனே மருத்துவரிடம் சொல்லி ஆலோசனை பெறுவது நல்லது. 
மாதவிலக்கு தொடர்பான அறிவுரைகளைப் போலவே மார்பகம் தொடர்பான இத்தகைய அறிவுரைகளையும் பெண் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம்.பெண்கள் தாங்களே மாதாந்திர பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதனால் வாழ்வின் பல்வேறு காலகட்டத்தில் மார்பில் ஏற்படும் மாற்றங்களை நன்கு புரிந்து கொண்டு பயமில்லாமல் வாழமுடியும்.