என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

அழகான பாதங்கள் வேண்டுமா ?

பாதங்களை அழகாக்குவதற்கு பெடிக்யூர் செய்து கொள்கிறோம். இதை நல்ல தரமான அழகு நிலையத்தில் செய்து கொள்வதற்கு அதிகமாக செலவாகும். இப்படி செய்து கொண்டாலும், அதை அனேகம் பேர் விரும்புவதில்லை. காரணம், அது மருத்துவ முறையில் இயந்திரத்தனமாக செய்யப்படுகிறது.

இதோ, வீட்டிலிருந்தபடியே இதை செய்து கொள்வதற்கு சில ஆலோசனைகள்….

* கால் நகங்களில் ஏற்கனவே இருக்கும் பாலீஷ்களை முதலில் நீக்க வேண்டாம். இதற்கு தேவையான ஸ்க்ரப்பர், கிரீம், துவாலை, காலுறை, செருப்புகள் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

* நகத்தை வெட்ட வேண்டும். அப்படி வெட்டும் போது, நகத்தை ஒட்ட வெட்டக் கூடாது. கால் இன்ச் அளவிற்கு இடைவெளி விட்டே வெட்ட வேண்டும். நகத்தை வெட்ட மற்றும் நகத்தின் அழுக்குகளை எடுக்க என்று, இரண்டுவிதமாக செயல்படும் நகவெட்டிகளை பயன்படுத்துவது நல்லது.

* பிறகு, மிதமான சுடுநீரில் சிறிதளவு ஷாம்பூ கலந்து, அதில் நம்முடைய கால்களை வைத்து ரிலாக்ஸாக சாய்ந்து அமர்ந்து கொண்டு புத்தகம் படிப்பது அல்லது நமக்கு பிடித்தமான இசையை ரசிப்பது என்று அதை அனுபவிக்கலாம்.

* கால்களுக்கான நல்ல தரமான ஸ்க்ரப்பர், பூமிஸ் கல், அதற்கான பிரஷ் போன்றவற்றை கொண்டு நன்றாக கால்களை தேய்த்துவிட வேண்டும். இதன் மூலம், கால்களில் படிந்துள்ள இறந்த செல்கள் உதிர்ந்துவிடும்.

* கால்களை இவ்வாறு தேய்க்கும் போது சிலருக்கு வலி ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படாமல் தவிர்க்க, அதற்கான கிரீம்கள் அல்லது பவுடரை தடவி தேய்க்கலாம். இப்படி செய்வதால், வலி குறைவதுடன் இறந்த செல்களும் இதனுடன் சேர்ந்து உதிர்ந்துவிடும்.

* இந்த செய்முறை முடிந்தவுடன், கால்விரல்களின் கணுப்பகுதியில் உள்ள தேவையில்லாத சதையினை, அதற்கென உள்ள பிரத்யேக கருவியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* இது முடிந்தவுடன், அடுத்தது முக்கியமாக செய்ய வேண்டியது கால்கள் மற்றும் நகங்களுக்கு தகுந்த மாய்ஸ்டரைசர் மற்றும் நக கிரீம் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

* முகத்திற்கு தரமான அழகு சாதனப் பொருட்களை வாங்கி உபயோகிப்பது மட்டும் போதாது. நம்முடைய கால்களையும் நாம் பேண வேண்டும். கால்விரல்களுக்கு நல்ல தரமான நகப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டும்.

* பெடிக்யூரை மாதத்திற்கு ஒருமுறையாவது செய்து கொள்வது நம்முடைய பாதங்களை அழகாக, மென்மையாக வைக்கும்.

* நம்முடைய தோழிகளை அழைத்து ஒருநாளில் அனைவரும் சேர்ந்து பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: