என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் உணவுகள் !!

இன்றைய அவசர உலகில் பலரால் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இதற்கு காரணம் அதிகப்படியான மன அழுத்தம், போதிய தூக்கம் இல்லாமை மற்றும் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாதது போன்றவை தான். தற்பொழுது வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தை அடைய வேண்டுமென்று, பலர் கடினமாக உழைப்பதுண்டு. அப்படி உழைத்தால் மட்டும் போதுமா என்ன? துணையுடன் காதல் வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்க வேண்டுமல்லவா? ஆனால் இன்றைய ஆண்களால் காதல் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை.

இருப்பினும், இந்த பிரச்சனைக்கு வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களுடன், பாலுணர்ச்சியை தூண்டும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் நல்ல தீர்வு காண முடியும். அதுமட்டுமின்றி, இன்றைய காலக்கட்டத்தில் கருத்தரிப்பது என்பது கடினமாக ஒன்றாகிவிட்ட நிலையில், பாலுணர்ச்சி குறைவாக இருந்து, குழந்தைப் பெற முயற்சித்தும் முடியாவிட்டால், பின் எவ்வளவு தான் சம்பாதித்தாலும், அது வேஸ்ட் தான்.

ஆகவே பாலுணர்ச்சியை தூண்டும் உணவுகளை தவறாமல் சேர்த்து வந்தால், ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தி அதிகரிப்பதோடு, பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, காதல் வாழ்க்கையை நன்கு சந்தோஷமாக அனுபவிப்பதுடன், நல்ல அழகான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.

சரி, இப்போது காதல் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தைப் பெற உதவும் உணவுகளைப் பார்ப்போம்.

வெங்காயம்
வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது லேசாகும். இப்படி லேசானால், இரத்தத்தில் அளவு அதிகரித்து, உடலில் சீராக பாய்ந்து, பாலுணர்ச்சியை நீண்ட நேரம் தக்க வைக்கும்.

பாஸ்தா
பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருப்பதால், அது காதல் வாழ்க்கையின் போது உடலில் எனர்ஜியை நீட்டிக்கும். எனவே பாஸ்தா சமைக்கும் போது, அதில் ஜாதிக்காய் மற்றும் சிவப்பு மிளகாய் போன்ற மூலிகைகளை சேர்த்து சமைத்து சாப்பிட்டால், மிகவும் நல்லது.

மிளகாய்
அளவுக்கு காரத்தை சாப்பிட்டால், எப்படி சுறுசுறுப்புடன் இருக்கிறோமோ, அதேப் போன்று காதல் வாழ்க்கையிலும் நன்கு செயல்பட முடியும்.


காபி
அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் நல்லதல்ல. ஆனால் அளவாக குடித்து வந்தால், உடலில் எனர்ஜி அதிகரிக்கும். இதனால் காதல் வாழ்க்கையிலும் நீண்ட நேரம் இருக்க முடியும்.

சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கியது. இது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடல் முழுவதும் சீராக ஓட வைக்கும்.

டார்க் சாக்லெட்
இனிப்பு இல்லாத டார்க் சாக்லெட் பாலுணர்ச்சியை தூண்டும் உணவுப் பொருட்களில் முதன்மையானது. எனவே இதனை தவறாமல் அவ்வப்போது சாப்பிடுங்கள்.

செர்ரி
செர்ரிப் பழங்களில், இரத்தக்குழாய்களை சுத்தம் செய்யும் ஆந்தோசையனின்கள் இருப்பதால், இதனை உட்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்து, காதலுணர்வு நீண்ட நேரம் இருக்கும்.

ஓட்ஸ்
ஒட்ஸ் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, படுக்கையில் நன்கு எனர்ஜியுடன் இருக்கவும் உதவும்.

குங்குமப்பூ
குங்குமப்பூ உடலில் உள்ள வலிகளை குணமாக்குவதோடு, உடலை மிகவும் சென்சிடிவ்வாக மாற்றி, தொட்டாலே காதல் உணர்ச்சியானது பெருக்கெடுக்குமாறு மாற்றிவிடும்.

கடல் சிப்பி
கடல் சிப்பியில் ஜிங்க் சத்து அதிகம் இருப்பதால், ஆண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தி அதிகரிக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தை சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்தத்தின் அடர்த்தியை லேசாக்கி, உடலில் சீராக ஓடச் செய்யும்.


மாதுளை
மாதுளையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, அதில் நன்கு எனர்ஜியுடன் செயல்பட முடியும்.

கிராம்பு
கிராம்பு சாப்பிட்டால், உடலின் வெப்பநிலை அதிகரித்து, ஆண்குறிகளுக்கு இரத்தத்தின் அளவு அதிகரித்து, அளவுக்கு அதிகமான பாலுணர்ச்சியை ஏற்படுத்தும்.

நவதானியங்கள்
உடலுறவில் நல்ல சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமானால், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள நவதானிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.

க்ரீன் டீ
க்ரீன் டீ குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள ரேடிக்கல்களை வெளியேற்றி, மனதை புத்துணர்ச்சி அடையச் செய்து, காதல் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

சோம்பு
சோம்பு வியர்வையை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, பாலுணர்ச்சியை நீண்ட நேரம் நீட்டிக்கும்.

கருத்துகள் இல்லை: