என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

அப்பன்டிசைட்டிஸ் (Appendicitis)


 

அப்பன்டிக்ஸ்(Appendix) எனப்படுவது நமது பெருங்குடலோடு சேர்ந்திருக்கும் ஒரு சிறிய உறுப்பாகும்.இது நமது உடலிலே எந்தவிதமான தொழிலையும் செய்வதில்லை.இது நமக்குத் தேவை இல்லாத ஒரு உறுப்பாகும். சிலவேளைகளில் இதிலே கிருமித் தொற்று ஏற்பட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.இதிலே ஏற்படும் கிருமித் தொற்றினால் அலர்ச்சி ஏற்படுவது அப்பன்டிசைட்டிஸ்(Appendicitis) எனப்படும்.




இதன் அறிகுறிகள்

        மெலிதான காய்ச்சல்
        வாந்தி
        பசிக்குறைவு
        வயிற்று வலி


இதனால் ஏற்படும் வயிற்று வலி ஆரம்பத்திலே தொப்புளைச் சுற்றி ஏற்பட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வலது பக்க அடி வயிற்றை நோக்கி நகரலாம். சில பேரில் இந்த மாற்றம் சரியாக விளங்காமல் நேரடியாக வலது பக்க அடிவயிற்று வழியே ஏற்படலாம்.

இந்த நோயை வைத்தியர் நோயாளியை பரிசோதிப்பதன் மூலம் ஓரளவுக்கு உறுதிப் படுத்திக் கொள்வார். .இதை உறுதிப் படுத்துவதற்கான வேறு விசேஷமான பரிசோதனைகள் தேவை இல்லை.

குறிப்பாக வலது பக்க அடி வயிற்றிலே கையினால் அழுத்தும் போது ஏற்படும் வழியை விடஅழுத்திய கையை சடுதியாக எடுக்கும் போது வலி அதிகரிக்கும்.இது Rebound tenderness  எனப்படும்.இவ்வாறான
வலி ஏற்பட்டால் அது அப்பன்டிசைட்டிஸ் ஆக இருக்க சந்தர்ப்பம் அதிகம்.

வைத்தியர் ஏற்பட்டிருப்பது இந்த நோய்தான் என்று நினைத்தால் சத்திர சிகிச்சை செய்து அந்த உறுப்பு நீக்கப்படும்.

சில பேரிலே தொற்று ஏற்பட்டு அந்த உறுப்பைச் சுற்றி சீழ் கட்டிக் -கொள்ளும்.அவ்வாறானவர்களில்சத்திரசிகிச்சை செய்வது ஆபத்தானது.அவர்களுக்கு அண்டி பயட்டிக்ஸ்(Antibiotics) கொடுக்கப்பட்டு சில  வாரங்களின் பின் சத்திர சிகிச்சை செய்யப்படும்.

கருத்துகள் இல்லை: