என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

சிரிக்கும் போது முகத்தில் கோடு விழுகிறதா

வாய்விட்டு மகிழ்ச்சியாக சிரிக்கும் போது உதடுகளோடு கண்களும் சிரிக்கும் அப்போது கண்களின் ஓரத்திலும் உதடுகளின் ஓரத்திலும் அனைவருக்கும் ஒரு கோடு ஏற்படும். இக்கோடுகள் உள்ளவர்கள் இதனைப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இவை வெறும் சிரிப்புக் கோடுகள் அல்ல இவை collagen என்ற புரதமும் hyaluronic என்ற அமிலமும் இழக்கப்படுவதனாலேயே ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். இந்த கோடுகள் ஏற்படுவதால் முகத்தில் முதுமை கூடி வயதினை அதிகரித்துக் காட்டும்.
பெரும்பாலும் 40-80 வயதிற்கிடையில் மனிதர்கள் இயற்கையான hyaluronic அமிலத்தினை இழக்கின்றனராம். முதலில் கொழுப்பை இழக்கும் இடமாகக் கண்கள்தான் உள்ளன. இதனுடன், சிரிக்கும்போது ஏற்படும் கோடுகளும் தொடர்புபட்டுள்ளன. இதனாலும் இச்சுருக்கங்கள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

 
சிரிப்புகளின் மூலம் ஏற்படும் சுருக்கத்தினை போக்க Botox என்ற மருந்து தசைநார்களை மரத்துப்போகச் செய்துவிடும். ஊசிகள் முகத்தினை ஓர் உறைந்த நிலைக்கு மாற்றிவிடும். இதற்கு மாறாக hyaluronic அமிலத்தினால் உருவாக்கப்பட்ட நிரப்பிகளை உட்செலுத்தினால் அது தோலை உப்ப வைத்துக்கொண்டிருக்கும். இதன் விலையும் Botox மருந்தின் விலையும் ஒன்றுதானாம். 300 பவுன்ட்கள் ஆகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எனினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு சிகிச்சை முறை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் ஹரோட்ஸ்சில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த WrinkleMD என்ற வலியற்ற ஊசியற்ற கருவியானது 130 பவுண்ட்களே பெறுமதியானதாகும். இது hyaluronic அமிலங்கொண்ட மூலக்கூறுகளைப் புதிய தொழிநுட்ப முறையினால் தோலுக்குள் ஆழமாகச் செலுத்துகின்றது.
இதனை 35-65 இற்குமிடைப்பட்ட பெண்கள் ஒரு மாதமாகப் பயன்படுத்தினார் என்றும் வலியற்றதாக இருந்ததாகவும் தோலியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். வாரந்தோறும் இந்த சிலிக்கன் அமைப்புச் சரிபார்க்கப்பட்டதாகவும் இவ்வாறு 4 வாரங்கள் முடிந்தபின்னர் அதை எடுத்தபோது அவர்களது 41.7வீதச் சுருக்கம் குறைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஊசியின் வலிகளின்றி அமிலத்தினைத் தோலிற்குள் செலுத்துவதானது தோலிற்கும் நல்லதாகும். கிருமித்தொற்றினையும் இது இல்லாமற்செய்கின்றது என்கின்றனர் நிபுணர்கள்.
இதனைப் பலதரப்பட்ட பெண்களில் செய்தபோதும் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு மாதிரியான விளைவுகள் கிடைத்திருந்தன. எனினும் இவை எவ்வளவு காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்குமென்பதும் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முகத்தின் இளமையை தக்கவைக்க இந்த சிகிச்சை முறையினை 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தயங்காமல் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.






கருத்துகள் இல்லை: