என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

சுருக்கமில்லாத முகம்

பெரும்பாலான இளம் பெண்கள் தற்போது "பாஸ்ட் புட்" வகை உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள். இதனால் அவர்களது முகம் இளவயதிலேயே வயதானவர் போல சுருக்கம் விழுந்து அழகை இழந்து தவிக்கிறார்கள்.

சுருக்கமில்லாத முகம் விரும்புபவர்கள் கவனமா கேட்டுக்குங்க...

அந்தந்த சிசனில் கிடைக்கும் காய்கறி-பழங்களைத் தவறாமல் சாப்பிட்டு விடுங்கள். இயற்கையான காய்கறி, பழங்களில் இருக்கும் விட்டமின்களும், சத்துக்களும் தோளில் சுருக்கம் வருவதற்கே அனுமதி கொடுக்காது.

வாரம் ஒன்று அல்லது 2 முறை ஆரஞ்சு ஜூஸோ (Orange Juice) , கேரட் ஜூஸோ (Carrot Juice) குடித்து வந்தால் சருமம், ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும்.

ஆறு சுவைகளில் துவர்ப்புச் சுவை தான் பெண்களின இளமைக்கு பாதுகாப்பானதாக உள்ளது. வாழைப்பூ, வாழைத் தண்டு, பெரிய நெல்லிக்காய் (Amla) போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, இளமையின் ஆயுள் அதிகரிக்கும்.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு சிரகத்துடன் வேகவைத்து மசித்து சாப்பிட்டு வாருங்கள். வாரம் 2 அல்லது 3 முறை இப்படி சாப்பிட்டு வர உடல் குளுமையாக இருக்கும். அதோடு இந்த ரெசிபி ஜீரண சக்தியைத் தூண்டி விட்டு, கழிவுகளை சுத்தமாக வெளியேற்றி விடும்.

இன்னொரு முக்கியமான விஷயம், வெந்தயக் கீரை நமது சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். எனவே தோல் சுருக்கத்தை விரட்ட வெந்தயக் கீரையை தாராளமா சாப்பிடுங்க.

மசாஜ்: நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கமா அது எங்கே என்பீர்கள்.

கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் "ஏ" இளமையான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிற

முழங்கையை "பளிச்" ஆக்க...!

பெண்கள் பலர் நாற்காலியில் ஒரே பொசிஷனில் அமர்வதுண்டு. இப்படி அமர்ந்திருந்தால் முட்டிகள் உராய்ந்து கறுத்துப் போகும். நாற்காலியில் வியர்வை படாமல் பார்த்துக் கொண்டாலும், முட்டி கறுப்பாகாது. நாற்காலியின் கைப்பிடிகளின் மீது டவலையோ அல்லது வெல்வெட் துணியையோ போட்டும் உட்காரலாம். இதனால் கைமுட்டி உராயாமல் இருக்கும்.

முட்டியின் கறுப்பு நிறத்தை அகற்ற...

4 தேக்கரண்டி ஆரஞ்சுத் தோல் பவுடரை, 4 தேக்கரண்டி பாலில் ஊறவைத்து கலந்து கொண்டு முட்டியில் பூசி லேசாகத் தேய்த்து விட்டு, 10 நிமிடங்களுக்குப் பின் தண்ணீரில் கழுவி விடலாம்.

மாய்சுரைசர்-கிரீம்கள், வாசலைன் (vaseline) மாதிரியான கிரீம்களை பூசுவதாலும் முட்டியின் கறுத்த நிறம் போய் விடும் என்கிறார் சித்த மருத்துவர் தி.வேணி! 

நக அழகு பராமரிப்பு 

நகங்களில் ஈரப்பசை பற்றாக்குறையுடன் காணப்பட்டால் அவை உடைந்து, சிதைந்து போய் விடும். இந்த நகங்களை மர ஸ்டிக்கினால் (நெயில்கட்டரில் ஷேப் செய்ய பயன்படுத்தும் பகுதி போன்றது) தேய்த்து சரி செய்யவும்.

நகங்களில் கட்டாயமாக ஆலிவ் எண்ணை அல்லது பாதாம் எண்ணை தொடர்ந்து தடவி வந்தால் சிதைந்த நகங்களும் கூட உயிர் பெறும். நம்மூரில் பெண்கள் பலர் நகங்களில் பாலிஷ் போடுவதுண்டு. விருந்து விழாக்களுக்கு போகும் பெண்கள் நகங்களில் அழகான டிசைன்கள் போடலாம். இதுதவிர நகத்தில் கற்களைப் பதித்து அசத்தலாக அலங்காரம் செய்யலாம். இப்படி செய்தால் செம அழகாக ஜொலிப்பீர்கள்.

சாதாரணமான நகங்கள் என்பது பிங்க் கலரில் பள, பளவென இருக்கும். ஆனால் துணி துவைக்கும் சோப், உப்புத் தண்ணீர் போன்றவை இந்நகங்களில் அடிக்கடி பட்டால் நகம் உடைந்து விட வாய்ப்பு அதிகம். இவற்றை பாதுகாக்க ஒரு சூப்பர் யோசனை.

வாரத்தில் 3 நாட்களாவது இரவு படுக்கும் முன்பு 1 டீஸ்பூன் சர்க்கரையுடன் 4 டீஸ்பூன் தேன்கலந்து நகங்களில் தடவிக் கொள்ளவும். 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவி வர, சாதாரண நகங்கள் தகதக ஜொலிப்புடன் அழகாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: