என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

மின்னும் அழகை பெற

மின்னும் அழகை பெற

""டயட்''
என்கிற பெயரில் உணவைக் குறைத்துக் கொண்டு உடலை ஸ்லிம்மாக வைத்துக்
கொண்டால் போதுமா? இதனால் சருமத்தில் உள்ள சத்துக்கள் குறைந்து, பொலி
விழந்து, சருமம் வறண்டு காணப்பட்டால் வெளிப் புற தேகத்துக்கு என்னதான்
''மேக்அப்'' செய்தா லும் பயனில்லை. இன்றைக்கு சந்தையில் அழகுக்காகப்
பொருட்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின் றன. இருக்கும் அரைகுறை அறிவை
வைத்துக் கொண்டு அனைத்தையும் வாங்கி, முகத்தில் உடலில் பூசி பின்பு
அவதிப்படுபவர்கள்தான் அநேகம் பேர்.

முதலில் நம் சருமம் எந்த வகையைச் சார்ந் தது என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும். வறண்ட சருமமா, எண்ணெய் வழியும் சருமமா என்பதை ஒரு கைதேர்ந்த
அழகுக் கலை நிபுணரிடம் கேட்டறிந்து கொண்டு அழகு பராமரிப்பை மேற்கொண்டால்,
அழகு என்றென்றும் நம் பக்கம்தான். மேலும் நம் உணவில் சமச்சீரான சத்துக்
களடங்கிய டயட் இடம் பெறவேண்டும். ஒருசிலர், வாளிப்பான தேகமும், மினு
மினுப்பான சருமமும் கொண்டு செழிப்பாகக் காட்சியளிப்பார்கள். இதற்கு மிக
முக்கியக் காரணம் சமச்சீரான உணவுப் பழக்கமே.
இப்படிப்பட்ட அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து பராமரிப்
பும் தேவை. வாரம் ஒருமுறை சருமத்தில் சேரும் அழுக்கை உடல் முழுவதும்
''ஸ்க்ரப்'' செய்து நீக்கி, முகம், கை, கால்களுக்கு மசாஜ் எடுத்துக்
கொண்டால் சருமச் சுருக்கங்களை நீக்கலாம். வறண்ட தேகம் உடையவர்கள்,
பதினைந்து நாட்களுக்கொருமுறை ஏதாவது ''ப்ரூட் பெக்'' எடுத்துக்கொண்டு
''பேஷியல்'' செய்துகொள்வது அவசி யம். இதனால் சருமத்தில் இழந்த தண்ணீர்ச்
சத்துக்கள் மீண்டும் பெறப் படுகின்றன..

தற்பொழுது வேலை பார்ப்பவர் களின் சூழ்நிலையும் 24 மணிநேரமும் குளிரூட்டப்
பட்ட அறைகளில்தான் அமைகிறது. இதனால் உடல் மேலும் வறண்டு போய் விடும்.
இதற்கென்றே ''நேச்சுரல்ஸ் க்ளோ பேஷியல் ஸ்பெஷல் பெக்'' அறிமுகப்படுத்
தியுள்ளது. இதனால் வியர்வையே ஏற்படாமல், நீர்ச்சத்து இழந்து காணப் படும்
சருமத்துக்குப் புத்துணர்ச் சியும், பொலிவும் உடனடியாகக் கிடைக் கிறது..



கூலிங் ஐ மஸாஜ்: .

இரவு, பகல் பாராமல் கம்பியூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு
இச்சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கண்களுக்கு உண்டாகும் அதிகக் களைப்பு, சூடு
இவையெல்லாம் அடியோடு நீங்கிவிடும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட ''ஜெல்
மாஸ்''கை ப்ரீசரில் வைத்து எடுத்து கண்களைச் சுற்றி அணிவித்து சிகிச்சை
தரப்படுகிறது..


மைக்ரோ டெர்மா சிகிச்சை:.

இது முக்கியமாக, சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி
ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. வெயி லில் அதிகம் சுற்றி,
வேலை பார்த்து சருமம் கறுத்துக் காணப்படுபவர்கள் குறிப்பாக இளை ஞர்கள்
இச்சிகிச்சையை மேற்கொண்டால் இழந்த அழகை மீண்டும் பெறலாம்.
ஐ ஸோன் ட்ரீட்மெண்ட்:.

சிலருக்குக் கண்ணுக்கு அடியில் கருவளை யம் தோன்றி, சருமம் பொலி விழந்து
மங்க லாகக் காணப்படும். அவர்கள் இத்தகைய ஐஸோன் சிகிச்சையைத் தொடர்ந்து
எடுத்துக் கொள்ள கரு வளையம், சுருக்கங்கள் நாளடை வில் மறையும்.
''சருமம் மினுமினுப்புடன் அழகாய் மிளிர்வதற்கு உடலில் கொஞ்சம் கொழுப்புச்
சத்தும் அவசியம்'' என்கிறார்கள் அழக்ககலை நிபணர்கள்

கருத்துகள் இல்லை: