என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

பிடிக்குமா?



Do you like - Child Care Tips and Informations in Tamil
பிடித்ததைச் செய்யாவிட்டால் வாழ்க்கை "டல்"தான்!
நமக்குப் பிடித்த கலையை வளர்த்துக் கொள்ளாவிட்டால், வாழ்க்கை இருண்டு போகும். இது உண்மை. அன்றாட வாழ்க்கையில் 99 சதவீதம் கடமைகளை நிறைவேற்றுவதிலேயே செலவிடும் போக்கு நம்மிடம் உள்ளது. நமக்கென்று ஒரு நிமிடமாவது செலவழிக்கும் போது தான் நம்மை நாம் உணரத் துவங்குவோம். 99 சதவீத நேரத்தைக் கடமையாற்றச் செலவிடுவதைச் சற்றே தளர்த்தி, கடமைகளை நேரமறிந்து செய்து, நமக்கென்று நேரத்தை ஒதுக்கி தினமும் சந்தோஷம் கண்டால், வாழ்க்கை இனிக்கும்.
மாதத்திற்கு ஒரு நாள் "ரொட்டீனுக்கு" லீவு!
மாதத்திற்கு ஒரு நாள் ரொட்டீன் வாழ்க்கைக்கு "டாட்டா" சொல்லி உங்கள் குடும்பத்தினருடன் வெளியில் சென்று விடுங்கள். சினிமா, டிராமா என்று பார்க்கச் சென்றால், அவற்றின் கதைக்குள் "புகுந்து கொண்டு மனம் வெளியில்" வர மறுக்கும். இப்படி நேரத்தை வீணடிக்காமல், பார்க், பீச், கோயில், உங்களுடன் மனம் விட்டுப் பழகும் உறவினர் வீடு என்று செல்லலாம்.
இவை எதுவுமே போரடித்தால் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி விடுங்கள். உங்களை அறியாமல் புத்துணர்வு கிடைக்கும்.
பாட்டு பாட பிடிக்குமா? அரை மணி நேரம் ஒதுக்குங்கள்!
சிலருக்கு வாய் விட்டுச் சத்தமாய் பாடுவது பிடிக்கும். வேலை செய்தபடியே பாடுவது கை வந்த கலையாக இருக்கும். ஆனால், வேலையைக் "கோட்டை விட்டு" பாடுவது ஆபத்து. இதிலும் திறமையுடன், அதிலும் ஜமாய்க்கலாம் என்றால் பிரச்னை இல்லை.
பாட்டு கேட்க மட்டும் பிடிக்கும் என்று சொல்பவர்கள், ரேடியோவில் பாட்டு கேளுங்கள். "டிவி" வேண்டாம்.
இனிப்பு பலகாரம் செய்யுங்க!
சிலருக்கு சமைப்பது ரொம்பவே பிடிக்கும். மனசு பாரமாக இருந்தால், அன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்து சாப்பிடுங்க. அதுவும் செய்யப் பிடிக்கவில்லை எனில், ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுங்க. அவசரமாய் உள்ளே தள்ளாமல் சிறிது எடுத்து நாக்கின் நுனியில் வைத்து அதன் முழு ருசியையும் அனுபவித்துச் சாப்பிடும்போது மனசு பாரமும் ஐஸ்கிரீம் போல் கரைந்து விடும்.
ஆரஞ்சு கலர் உடை உடுத்திக் கொண்டால்...
உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்? எதுவாக இருந்தாலும் ஆரஞ்சு நிற உடையை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உங்கள் தோல் நிறம் எதுவாக இருந்தாலும் போரடிக்கும் போது ஆரஞ்சு நிற உடையை உடுத்திக் கொண்டால், உங்களை அறியாமல் மனம் துள்ளத் துவங்கும்.
உடற்பயிற்சி செய்யுங்க!
தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், நாள் முழுதும் சுறுசுறுப்பாகவே இருப்போம்.
தூங்கி வழியும் பேர்வழிகளுக்கு இது கை கண்ட மருந்து. செய்யத் துவங்கும் வரை தான் சோம்பல்; செய்யத் துவங்கி விட்டால், மனமும், உடலும் புத்துணர்வு பெறும்.
குழந்தை பெற்றவர்கள் அவர்களுடன் கொஞ்சி மகிழலாம்!
திருமணமாகிக் குழந்தை பெற்றவர்கள், ஒரு நாள் முழுதும் அவர்களுடன் கொஞ்சி மகிழ்ந்து, அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யலாம். இதில் கிடைக்கும் சந்தோஷம் கடலைப் போன்றது.
இது போன்று, உங்களுக்கென பல விஷயங்களில் அக்கறை செலுத்தினால் சோர்வுக்கும், சோகத்துக்கும் "டாட்டா" சொல்வீர்கள்!

கருத்துகள் இல்லை: