என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

நகைகள் வாங்க போறீங்களா....



To buy jewels... - Child Care Tips and Informations in Tamil
நகைகள் வாங்கும்போதும், வாங்கிய பின்னும் பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் இதோ:
* நகை வாங்கச் செல்லும் முன், எந்த நகை வாங்கப் போகிறோம் என்பதை உறுதி செய்த பின் கடை படி ஏறுங்கள்.
* உங்கள் "பட்ஜெட்" என்ன என்பதில் தெளிவாய் இருக்க வேண்டும்.
* "ஹால் மார்க்" முத்திரை போட்ட நகைகளையே வாங்க வேண்டும்.
* பழைய நகைகளில் கல் வைத்த நகையைப் போட்டு விட்டு புதிதாக வாங்க வேண்டும் என்று நினைத்தால், கற்களை எடுத்த பின் எடை போட்டு, அதற்கேற்ற விலையில் புதிய நகைகளை வாங்குங்கள்.
* செய்கூலி எவ்வளவு சதவீதம், சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* சரியான ரசிது கொடுக்கப்படுகிறதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.
* அணிவதற்காக நகை வாங்கப் போகிறீர்களா? அல்லது முதலீடு செய்யும் முயற்சியா? முதலீடு என்றால், தங்கக் காசாக வாங்கி வைத்துக் கொள்வது தான் சிறந்தது.
* நகை வாங்கக் கிளம்பும் முன், தங்கத்தின், வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* தரமான கடைகளில் நகை வாங்குங்கள். தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் கடைகளில் வாங்கினால் தரம் குறையும். பிறகு வருந்த வேண்டாம்.
* கே.டி.எம்., நகைகள் என்பன தனியாகத் தயாரிக்கப்படுபவை. நீங்கள் வாங்கும் நகை எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ரசிதில் இது குறித்த தகவல் எழுதப்பட வேண்டும்.
* நகைகளை வாங்கியவுடன், அதைப் புகைப்படம் எடுத்து வைத்து விடுங்கள்.
* நகைகளை "இன்சூர்" செய்வது மிக மிக முக்கியம். இதெல்லாம் சற்று சிரமமான வேலைகள் தான். ஆனாலும் விடாதீர்கள். செய்து வைத்து விடுங்கள். ஆபத்துக்கு உதவும்.
* வாங்கிய நகைகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். நகைகளை அணிவதற்கு முன்னதாகவே, பவுண்டேஷனோ, பவுடரோ போட்டுக் கொள்ளுங்கள். நகைகளை அணிந்த பின் இவற்றைப் பூசிக் கொண்டால், நகைகள் பொலிவிழந்து விடும்.
* நகைகளைக் கழற்றி பத்திரப்படுத்தும்போது வெல்வெட் துணியில் போட்டு வைப்பது நல்லது. வெறும் டப்பாக்களில் போட்டு வைத்தால் கீறல்கள் விழுந்து பொலிவு கெடும்.
* ஒவ்வொரு நகையையும் தனித்தனி டப்பாக்களில் போட்டு வைத்தால் புத்தம் புதிதாக ஜொலிக்கும்.
* நிரந்தரமாக அணிந்து கொள்ளும் நகைகளை வாரந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். "மைல்டு ஷாம்பு"வில், மென்மையான பிரஷ்ஷைத் தோய்த்து பத்திரமாக நகைகளைத் தேய்த்துக் கழுவினால் நகைகள் "பளிச்" சென்றிருக்கும்.

கருத்துகள் இல்லை: