என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

காலணிகள் வாங்கும் முன்



நாம் உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் செலுத்தும் கவனத்தை, செருப்பைத் தேர்ந்தெடுப்பதில் காட்டுவதில்லை.
காலத்துக் கேற்ற உடைகள் மாதிரி காலணிகளும் உள்ளன.

செருப்பு வாங்கும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

மற்றவர்களின் காலணியைப் பார்த்து அது போல வாங்காதீர்கள்.

உங்கள் பாத அமைப்புக்கு ஏற்ப வாங்கவும். தட்டையான பாதம் உள்ளவர்களுக்கு எல்லா விதமான செருப்பும் எடுப்பாக இருக்கும். அதே நேரம் அகலமான பாதங்களை உடையவருக்கு, மிகப் பெரிதாக பெருவிரல் எலும்பு உள்ளவர்களுக்கு மூடிய காலணிகள் நல்லது.

சிலருக்கு தோல் காலணிகளால் அலர்ஜி ஏற்படும். அவர்கள் ஜோத்பூரி அல்லது கோலாபூரி செருப்புகள் அணியலாம்.
செருப்புகளின் எடை அதிகமாக இருக்கக் கூடாது.

தரமான செருப்புகளையே அணியுங்கள்.

வீடு மற்றும் வெளியே அணிந்து செல்லும் காலணிகளை தனித் தனியே வைக்கவும்.

அதிக நேரம் காத்திருக்க வேண்டிய இடத்துக்குப் போகும் போது அதிக உயரம் இல்லாத செருப்பை அணியவும்.

இதே போல இண்டர்வியூக்கு செல்லும் போது ஸ்ட்ராப் உள்ள செருப்புகளையே அணியவும்.

குளிர் காலத்தில் பாதத்தை ஒட்டிய படி இருக்கும் செருப்புகளையும், மழைக் காலத்தில் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணியவும். கோடைக் காலத்தில் காற்றோட்டமான செருப்பு அணியவும்.

வயதானவர்களுக்கு மென்மையான செருப்புகளை வாங்கிக் கொடுங்கள்.

ஃபேஷன் என்ற பெயரில் பார்க்கும் காலணிகளை யெல்லாம் வாங்க வேண்டாம். வாங்கும் செருப்பு எல்லா உடைக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும்.

மழைக் காலத்தில் செருப்பை வெளியில் உலர வைத்து பின்பு, பிளாஸ்டிக் சுவரில் அல்லது பிளாஸ்டிக் தாளில் மூடி ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கவும்.

செருப்புகளை வாங்கினால் மட்டும் போதாது, அதை நெடு நாள் வரை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.
தோல் மற்றும் துணி வகைகளில் ஆன செருப்புகள் நீண்ட நாள் உழைக்காது.

தோலில் ஆன செருப்புகள் மற்றும் சேண்டல் வகை செருப்புகளுக்கு அடிக்கடி பாலிஷ் போடவும். இதனால் இதன் அழகு கூடுவதோடு அதன் ஆயுளும் கூடுகிறது.

காலணிகளை அடுக்கி வைக்க கடை வீதியில் வித விதமான ஷூ ரேக் மற்றும் ஷூ பைகள் கிடைக்கின்றன.
பட்டு, வெல்வெட்டு போன்ற செருப்புகளை பழைய பருத்தித் துணியால் சுற்றி வைக்கலாம். நாடா உள்ள, சரிகை மற்றும் கண்ணாடி வைத்த செருப்புகளையும் இப்படி வைக்கலாம்.

வாங்கிய செருப்புகளை அதிக நாள் பயன்படுத்தாமல் வைக்காதீர். இற்றுப் போகும். அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் தான் அதிக விலை கொடுத்து செருப்புகளை வாங்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: