என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்க



Earn mony to many way by home - Child Care Tips and Informations in Tamil
பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க எத்தனையோ கவுரவமான வழிகள் உள்ளன. அவசரஅவசரமாய் தூங்கியெழுந்ததும் ஒன்றும் பாதியுமாய் சமையலை முடித்து அரக்கப்பரக்க குழந்தைகளை பள்ளிக்குத் துரத்தி விட்டு ஓட்டமும் நடையுமாய் சென்று காலைப் பேருந்தை பிடித்து அலுவலகம் போனால் உயரதிகாரியிடம் திட்டு வாங்கி... இவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு சாரசரி பெண்ணால் எவ்வளவு சம்பாதித்து விட முடியும்? அதிகபட்சம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்குமா?
அதே அளவு வருவாயை நாம் வீட்டிலிருந்தபடியே நமக்கு விருப்பமான நேரத்தில் பிடித்தமான வேலையைச் செய்யவும் முடியும். அட அது எப்படி என்கிறீர்களா?
சாப்பிட பயன்படுத்துகிறோமே ரொட்டி. அதைக் கொண்டு விதவிதமான வடிவங்களில் கலைப் பொருட்களைச் செய்வதுதான் "ப்ரெட்கிராப்டிங்" என்கிறார்கள். ஆனால் இதை பார்த்து ரசிக்கத்தான் முடியும். சாப்பிட முடியாது காரணம் இதில் துத்தநாக ஆக்ஸைடு கலந்திருப்பதுதான். எறும்பு பூச்சிகளின் அரிப்பிலிருந்து இப்பொருட்களைக் காப்பதற்காகவே துத்தநாக ஆக்ஸைடு கலக்கிறார்கள்.
வீட்டிலுள்ள அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு தன் கையால் செய்த பொருட்களால் வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், ப்ரெட்கிராப்ட் வெஜிடபுள் கார்விங் போன்ற விஷயங்களில் பெண்கள் ஈடுபடுவது அவர்களின் ரசனையை உயர்த்துவதுடன் குடும்ப வருவாயைப் பெருக்கும்.
பிரெட் 5 துண்டுகள், துத்தநாக ஆக்ஸைடு ஒரு டீஸ்பூன், பெவிகால்- தேவையான அளவு, வளையும் தன்மையுள்ள மென்மையான கம்பி, பேப்ரிக் பெயிண்ட்- ஏதேனும் 4 நிறங்கள், ஐஸ்கிரீம் கிண்ணம்- 1, தேங்காய் எண்ணெய் சிறிதளவு.
செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும்.
பிரெட்தூள், மற்றும் துத்தநாக ஆக்ஸைடை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு பெவிக்கால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு பிசையும் போது கையில் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளாமல் இருக்க உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
கிண்ணத்தைச் சுற்றி பெவிகால் தடவவும். பெவிக்காலின் மேல் பேப்பரை ஒட்டவும். பிசைந்து வைத்துள்ள மாவை பேப்பரில் ஒட்டவும். வளைவாக இருப்பது போல் கம்பியைச் சொருகவும். (இது கூடை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்) ஒவ்வொன் றும் காய்ந்த பிறகுதான் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும். காய்வதற்கு எப்படியும் மூன்று நாட்களாவது ஆகும்.
டெடிபியர் செய்யலாமா?
முதலில் டெடியின் உடம்பைச் செய்துவிட்டு கை, கால் தலை செய்வதற்காக உடம்பின் மேல் பக்கவாட்டில் கைகளுக்காக இரு பக்கங்களிலும் இரண்டு சிறிய கம்பியும், கீழ் பக்கவாட்டில் கால் களுக்காக இரண்டு சிறிய கம்பியும், உடம்பின் மேல் பாகத்தில் தலைக்காக இரண்டு கம்பியும், சொருகி வைக்கவும். உடம்பு பகுதி காய்ந்த பிறகு கை, கால், தலை என்று சரி செய்து அதற்காகவிடப்பட்டுள்ள கம்பியில் அழகாக சொருகி விடுங்கள்.
தலை செய்யும் போதே காதுக்காக இரண்டு கம்பி செய்த பிறகு காதையும் செய்து கம்பியில் பொருத்தவும்.
முழுமையாக எல்லாம் காய்ந்த பிறகு பேப்ரிக் பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டுங்கள்.
கூடையைச் சுற்றி, பூ, இலை என்று நாம் செய்யும் அலங்காரங்கள் எல்லாம் கற்பனையைப் பொருத்தது. உதாரணமாக பூ என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கு பெரிதாக ஒன்றும் மெனக்கிட வேண்டாம். சுண்டைக்காய் அளவு மாவை உருட்டிக் கொண்டு பேனாவின் பின் பக்கத்தினால் மாவை அழுத்தினால் பூ, ரெடி. இதை கூடையிலுள்ள கம்பியில் ஆங்காங்கே சொருகி வைத்தால் அழகான பூக்கூடை ரெடி.
கைவேலை செய்வதற்கு நிறைய பொறுமையும் ஆர்வமும் தேவை.
இந்த மாதிரி ஒரு கலைப் பொருளைச் செய்ய 50லி ருந்து 75 ரூபாய் வரைதான் ஆகும். ஆனால் கடைகளில் 150 லிருந்து 200 ரூபாய் வரை கொடுத்து வாங்கத்தயாராக இருக்கிறார்கள். தெரிந்தவர்களுக்குப் பரிசாகவும் அளிக்கலாம்.

கருத்துகள் இல்லை: