என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

மேனியை மெருகூட்ட!



Beauty Tips For a glowing skin - Beauty Care and Tips in Tamil
அழகான பெண்கள் கூட படிப்பு, வேலை என வெளியில் சுற்றும்போது கருத்து விடுகிறார்கள். நேரமின்மையால் தங்களின் தோற்றம் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவர். ஆனால் ஆரோக்கியமான சருமம் வேண்டுமெனில் சிறிது நேரமேனும் அதற்காக மெனக்கெடுவதில் தவறில்லை.
வுட் லேம்ப் ஃபேஷியல்:
இதைச் செய்து கொள்ளுவதற்கு முன் அழகுக் கலை நிபுணரிடம் சருமத்தைக் காட்டி தங்களுடையது வறண்ட சருமமா அல்லது எண்ணெய்ப் பசை சருமமா என்பதைக் கண்டறிய வேண்டும். வுட் லேம்ப் அதைக் கண்டுபிடித்து விடும். எண்ணெய் சருமமாக இருந்தால் மஞ்சள் புள்ளிகள் தெரியும். வறண்ட சருமம் எனில் வெள்ளைப் புள்ளிகள் தெரியும். அதற்கேற்ப சிகிச்சை பெறலாம்.
முகத்தின் திடீர் பளபளப்புக்கு "ஆக்ஸிஜன் ப்ளீச்":
இந்த ப்ளீச்சில் ஆக்ஸிஜன் கலந்து இருப்பதால் சருமத்தில் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சினைகள் வராது. முகத்தில் உள்ள பூனை முடிகள் கூட சரும நிறத்துக்கு மாறிவிடுவது இதன் கூடுதல் சிறப்பு.
கோல்டு பேஷியல்:
மணப்பெண்களால் விரும்பி செய்யப்படும் ப்ளீச் இது. 24 காரட் கோல்டு க்ரீம் என்பதால் மிக விரைவில் முகம் பொலிவடையும். ஜெல் மாஸ்க் போடுவதால் முகம் வழவழப்பாக மாறும்.
கழுத்து மசாஜ்:
இயல்பிலேயே அழகான முகம் என்றாலும் மன அழுத்தத்தால் முகம் சுருங்கிக் கொள்ளும். சிலருக்கு கழுத்தில் துர்நீர் சேர்ந்து கொண்டாலும் மன அழுத்தம் அதிகரித்து தலைவலி உண்டாகும்.
பின் கழுத்தில் உள்ள அழுத்தப் புள்ளிகளை மசாஜ் செய்வதால் டென்சன் குறைந்து ரிலாக்ஸ் ஆகலாம்.
வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சைகள்:
1 டீஸ்பூன் ஜெலட்டினை 1/2 கப் வெந்நீரில் கரைத்து அதில் கை, கால் நகங்களை ஊற வைத்தால் நகங்கள் உடையாது, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
1 டேபிள்ஸ்பூன் கேரட் சாறில் 2 டீஸ்பூன் பாதாம் பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பயறு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்த விழுதை முகம், கை, கால் என வெயில்படும் இடங்களில் தடவி வந்தால் வெயிலால் கருத்த சருமம் நிறம் மாறும்.
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் தலா 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் கலந்து லேசாகச் சூடுபடுத்தி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் உதிராமல் செழிப்பாக வளரும்.

கருத்துகள் இல்லை: